மூச்சுத் திவலை என்பது பெரும்பாலும் நீரைக் கொண்டுள்ள ஒரு துகள் ஆகும். இது உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் விரைவாக தரையில் விழும் அளவுக்கு பெரியது. பெரும்பாலும் 5 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டதாக வரையறுக்கப்படுகிறது. சுவாசிப்பது, பேசுவது, தும்மல், இருமல் அல்லது வாந்தியெடுத்தல் போன்ற செயல்பாடுகளின் விளைவாக சுவாசத் துளி இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அல்லது தூசுப்படலத்தை உருவாக்கும் மருத்துவ நடைமுறைகள், கழிப்பறைகளை சுத்தப்படுத்துதல் அல்லது பிற வீட்டு வேலை நடவடிக்கைகள் மூலம் செயற்கையாகவும் இத்துளிகளை உருவாக்க முடியும். மேலும்...
1868 – அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய-இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கூட்டுப் படைகளின் இருவர் கொல்லப்பட்டனர்.
2010 – போலந்து விமானம் ஒன்று உருசியாவில் சிமோலென்ஸ்க் நகரில் வீழ்ந்ததில், போலந்து அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி, அவரது மனைவி, மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 96 பேர் உயிரிழந்தனர்.
சு.காந்திமதி தமிழ்நாட்டிலுள்ளவேலூரைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு
முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். அரசு பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.யோகா, உடற்பயிற்சி, பள்ளிப்பணி என திட்டமிட்டு நேரத்தைச் செலவிடும் காந்திமதி கிடைக்கும் குறைந்த ஓய்வு நேரத்திலும் விக்கிப்பீடியாத் திட்டங்களில் பங்களிப்பு செய்கிறார்.
விக்கிமூலத்தில் சுமார் 1700 தொகுப்புகளும், விக்கித்தரவில் சுமார் 1300 தொகுப்புகளும் செய்துள்ள காந்திமதி விக்கிப்பீடியாவில் வேங்கைத்திட்டம் 2.0 போட்டி, விக்கி மகளிர் நலம், விக்கிப் பெண்களை நேசிக்கிறது 2020 போன்ற திட்டங்களில் பங்கேற்று முக்கிய பங்காற்றியவர்.
புனித பசில் பேராலயம்உருசியத் தலைநகர் மாஸ்கோவில்செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட்டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,28,510 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.