அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • கல்யாணபந்தியில் சாப்பாட்டிற்கு ஒரே ஈக்களாக படையெடுக்கின்றனவா? கவலைப்படாதீர்கள் ஒரு கொத்து கறிவேப்பிலையை கசக்கி பந்தி நடுவே வையுங்கள் அப்புறம் அந்தப்பக்கம் ஈ தலையே காட்டாது.

  • பவழமல்லி பூக்களை கசக்கிப்பிழிந்து அந்தச்சாற்றை வெயிலில் காயவைத்தால் பவழமல்லி சாந்து கிடைக்கும்.

  • சிறிது சர்க்கரையுடன் 15பூச்சி உருண்டைகளை பொடிசெய்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, சிறிது மண்ணெய் ஊற்றி சிறிய துணியில் தோய்த்து பூச்சிகள் உள்ள இடத்தில் வைக்க, அவை வந்து இறந்துவிடும்.

  • மருதாணி இலையை அரைத்து அந்த விழுதோடு சிறிது அமிர்தாஞ்சனத்தையும் கலந்து இட்டுக்கொண்டால் செக்கச்செவேலென்று வரும்.

  • துளசி இலையை உடலில் தேய்த்துக்கொண்டு படுத்தால் கொசு அருகிலேயே வராது. நிம்மதியாய் தூங்கலாம்.

  • உடம்பு அரிப்பு ஏற்பட்டு உடம்பு பூராகவும் திட்டு திட்டாக வந்தால், கொஞ்சம் புளித்த கெட்டி மோரில் 5, 6 செம்பருத்திப் பூக்களை பறித்துக் கரைத்து அரிக்கும் இடங்களில் தேய்த்தால் மாறிவிடும்.

  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து மஞ்சள் காமாலைக்கு கொடுக்கலாம்.

  • வீட்டிலுள்ள தொட்டிச்செடிகளும் குரோட்டன்களும் ஒளி மங்கி இலைகள் சோர்வடைந்து மங்கலாய் இருந்தால், அவற்றின் மேல் கால் தேக்கரண்டி எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து தெளியுங்கள். பச்சைப்பசேல் என்றாகிவிடும்.