அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • துளசியை மென்று ஒரு பிடி தின்றால் தேள்கொட்டிய விடம் இறங்கிவிடும். கொட்டிய இடத்தில் துளசிச்சாறு தேய்க்கலாம்.

  • தேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.

  • தோலில் முள்முள்ளாக வரும் வறட்டு சொறிக்கு எலுமிச்சம்பழச் சாறு தேய்த்துக் குளிக்கலாம்.

  • முகப்பருவை நீக்க சிறிதளவு சாதிக்காயை இழைத்து தினமும் பருக்களின் மீது தடவி வர, பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

  • சிறிது சர்க்கரையுடன் 15பூச்சி உருண்டைகளை பொடிசெய்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, சிறிது மண்ணெய் ஊற்றி சிறிய துணியில் தோய்த்து பூச்சிகள் உள்ள இடத்தில் வைக்க, அவை வந்து இறந்துவிடும்.

  • முகப்பருவிற்கு சீரகம் கருஞ்சீரகம் சம எடை எடுத்து எருமைப்பால் விட்டு அரைத்துப்போடலாம்.

  • வீட்டிலுள்ள தொட்டிச்செடிகளும் குரோட்டன்களும் ஒளி மங்கி இலைகள் சோர்வடைந்து மங்கலாய் இருந்தால், அவற்றின் மேல் கால் தேக்கரண்டி எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து தெளியுங்கள். பச்சைப்பசேல் என்றாகிவிடும்.

  • துளசி இலையை உடலில் தேய்த்துக்கொண்டு படுத்தால் கொசு அருகிலேயே வராது. நிம்மதியாய் தூங்கலாம்.