வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு.

வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன.

பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன. சுங்கவரி, காணிக்கை, குத்தகைக்காரர் நிலக்கிழாருக்கு செலுத்தும் வரி, கடமை வரி, விருப்ப வரி, கலால், மானியம், அரசு உதவி வரி, மதிப்புக் கூட்டு வரி என்னும் பல்வேறு பெயர்களால் வரி வசூலிக்கப்படுகின்றது.

வரலாறு[தொகு]

எகிப்தில் வரி செலுத்தாததால் கைது செய்யப்பட்ட வேளையாட்கள்

முதன் முதலில் வரி விதிக்கப்பட்டது கி.பி 3000-2800 வரையிலான பண்டைய எகிப்தில் ஆகும்.[1] பொதுவாக பத்தில் ஒரு பகுதியே வரியாக விதிக்கப்பட்டது. சில இடங்களில் கூலி இல்லாமல் குறித்த நாட்களுக்கு அரசில் கட்டாய பணியமர்த்துவதும் வழக்கில் இருந்தது.[2] பார்வோன் மக்களிடம் வரி சேகரிக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது அரசு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வழக்கமுடையவராய் இருந்ததாக ஆவண பதிவுகள் கூறுகின்றன. இத்தகைய வரிகளுக்கான அத்தார்சி சீட்டுகளும் கிடைத்துள்ளன.[3] எகிப்தியர் வரி செலுத்தும் மிகப்பழைய சான்று ஒன்று விவிலியத்திலும் உள்ளது. தொடக்க நூல் 47:24இல் நிலத்தின் விளைச்சலில் ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குச் வரி செலுத்த யோசேப்பு ஆணையிட்டதாக கூறுகின்றது.

பாரசீக பேரரசில் நெறிமுறைப்படுத்தப்பட்ட நிலையான வரி அமைப்பு கி.மு. 500இல் முதலாம் தேரியசினால் அறிமுகப்படுத்தப்பட்டது;[4] இம்முரையில் அரசு முழுவதும் பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதனதன் விளைச்சலுக்கு ஏற்றபடி வரி வசூலிக்கப்பட்டது. அரசு முழுவது மொத்தமாக 20 முதல் 30 வரையிலான பகுதிகளைக்கொண்டிருந்தது. இவ்வகை வரிகளை வசூலிக்க தனியாக ஆளுநர்கள் நியமிக்கப்படிருந்தனர். இவர்கள் வசூளித்த வரிகளில் இருந்து அப்பகுதியின் வளைமையினை நாம் அறியலாம். எடுத்துக்காட்டாக பாபேல் பகுதியே அதிகம் வரி வசூலிக்கப்பட்ட பகுதியாகும். 1000 வெள்ளி தாளந்துகளும், நான்கு மாத படையினருக்கான உணவும் வரியாக பெறப்பட்டது. இந்தியாவிலிருந்து 4680 வெள்ளி தாளந்துகள் மதிப்புள்ள தங்கமும், எகிப்திலிருந்து 700 வெள்ளி தாளந்துகளும், 120,000 அளவை தானியமும் பெறப்பட்டது.[5] இந்த வரி முற்றிலும் நிலங்களையும் அதன் உற்பத்தி திறன் மற்றும் காணிக்கை நிலைகளையும் அடிப்படையாகக்கொண்டு இப்பகுதிகளின் மீது விதிக்கப்பட்டிருந்தது.[6]

எகிப்திய எழுத்து முரையினை புரிந்து கொல்ல உதவிய ரொசெட்டாக் கல், 196 கி.பியில் ஐந்தாம் டாலமி மன்னனால் விதிக்கப்பட்ட வரிகளின் மூன்று மொழி விவரிப்பாகும்.[7] இந்தியாவில், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி ஜிஸ்யா (முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான வரி) விதித்திருந்தனர். அதனை பேரரசர் அக்பர் நீக்கினார்.

வரி அறவிடுவதன் நோக்கங்கள்[தொகு]

அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:

பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன:

அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்:

  • வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல்.
  • தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
  • வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல்,
  • பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது),
  • குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.

விமர்சனங்கள்[தொகு]

நியாமற்ற வரி மற்றும் அதிக வரி உழைப்போரின் வருமானத்தை சூறையாடுகிறது அவர்களின் உற்சாகத்தை, முதலீட்டை இடையூறு செய்கிறது. அரசின் சேவைகளை பெறாமல் விட்டாலும், வரி செலுத்தாமல் இருக்க உரிமை இல்லை என்பதால் பலர் வரி வசூலிப்பதையே தவறு என்கின்றனர். வருமான வரி செலுத்துவது சட்ட அமைப்பு மூலம் கட்டாயமாதலால் சிலர் இதனை அரசாங்கம் திருடுவதாகவும், மிரட்டி பணம் பறித்தலாகவும், சொத்து உரிமைகளை மீறுவதால் அடிமை போல நடத்துவதாகவும், அல்லது கொடுங்கோன்மைக்கு ஏதுவாகும் என்றும் விமர்சிக்கின்றனர்.

பொதுவுடைமையாளர்கள் மற்றும் சமூகவுடைமையாளர்கள் வரிவிதிப்பினை எதிர்க்கின்றனர். காரல் மார்க்சு அரசு என்பதை ஒழித்து அரசில்லா பொதுவுடைமை நாட்டினை நிறுவ ஆவல் கொண்டார். சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளில் பெரும்பாலான அரசின் வருமானம் நிறுவனங்களின் மீதுள்ள உரிமையினால் வருவதால் பண வரிவிதிப்பு அவசியம் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.[8] வரிவிதிப்பின் அறநெறி சில நேரங்களில் கேள்விக்குட்படுத்தப்பட்டாலும், வரிவிதிப்பு பற்றி மிக அதிக வாதங்கள் விதிக்கப்பட்ட வரி தொடர்புடைய அரசால் செலவு பெய்யப்படும் முறை பற்றியே உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Taxes in the Ancient World, University of Pennsylvania Almanac, Vol. 48, No. 28, April 2, 2002
  2. David F. Burg (2004). A World History of Tax Rebellions. பக். vi-viii. ISBN 9780415924986. http://books.google.co.uk/books?id=T91k6HAODzAC&lpg=PP1&pg=PP1#v=onepage&q&f=false. 
  3. Olmert, Michael (1996). Milton's Teeth and Ovid's Umbrella: Curiouser & Curiouser Adventures in History, p.41. Simon & Schuster, New York. ISBN 0-684-80164-7.
  4. "Darius I (Darius the Great), King of Persia (from 521 BC)". 1902encyclopedia.com. பார்த்த நாள் 2013-01-22.
  5. "History Of Iran (Persia)". Historyworld.net. பார்த்த நாள் 2013-01-22.
  6. The Theocratic Ideology of the Chronicler – by Jonathan E. Dyck – p. 96 – BRILL, 1998
  7. British Museum. "History of the World in 100 Objects:Rosetta Stone". BBC.
  8. Li, Jinyan (1991). Taxation in the People's Republic of China. New York: Praeger. ISBN 0-275-93688-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரி&oldid=1930998" இருந்து மீள்விக்கப்பட்டது