செய்தி
தமிழக மீனவர்களை துச்சமாக எண்ணும் இலங்கை தலைகள்: இராமேஸ்வர மீனவ பிரதிநிதி கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015, 06:39.54 AM GMT ]
தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று இலங்கை பிரதமர் ரணில் நகைச்சுவைக்காகவே தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்த கருத்துக்கு இராமேஸ்வர மீனவர் பிரதிநிதி ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவதற்கான அதிகாரம் இலங்கை இராணுவத்தினருக்கு உண்டு என தெரிவித்திருந்தார்.

இந்திய மீனவர்கள் 600க்கும் மேற்பட்டோரை இலங்கைக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

2011ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீனவர்கள் சிலர் ஆயுதங்களை வழங்கி வந்தனர்.

அவ்வாறு ஆயுதங்கள் வழங்க இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் மீனவர்களே சுடப்பட்டிருக்கின்றனர், 2011ம் ஆண்டுக்கு பின்னர் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறாமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடந்திருக்காது.

அத்துமீறிவிட்டு மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவதில் நியாயமில்லை.

ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே அவர்கள் இருந்திருந்தால் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது.

என் வீட்டுக்குள் யாராவது அத்துமீறி நுழையும்போது அவரை நான் சுட்டால் என் நாட்டின் சட்டதிட்டம் அதை ஏற்றுக்கொள்ளும்.

மீனவர் பிரச்சினைக்கும் இது பொருந்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கருத்துக்கள் தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து கடந்த 3ம் திகதி கொழும்பில் மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய இலங்கை ஜனாதிபதி இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க வேண்டும் என்றும் கடற்படைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கைக் கடற்பரப்பினுள் அத்து மீறும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகைச்சுவைக்காவே தெரிவித்ததாக சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என உலகத்தில் எந்த தலைவரும் சொல்லாத கருத்தினை தெரிவித்துள்ளார் எனவும்,

பிரதமரின் கருத்திற்கு முன்னாள் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் காணப்படுகின்றது எனவும்,

தமிழக மீனவர்களை இலங்கை அரச தலைவர்கள் துச்சமாக எண்ணுகின்றனர் எனவும் இராமேஸ்வரம் மீனவர் பிரதிநிதி ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை கேள்விகுறியாக்கிய இப்பிரச்சினைக்கு இந்தியாவின் வலிமையான பிரதமர் என கூறப்படும் நரேந்திர மோடி நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-04-2015, 09:17.01 AM ]
டலஸ் அழகபெரும போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் குறித்து நிதி மோசடி பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மோசடிகள் பற்றி தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
[ Saturday, 25-04-2015, 09:01.04 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 எண்ணத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-04-2015, 08:53.03 AM ]
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விபுலானந்த வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியொன்றில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் ஒன்றினை சனிக்கிழமை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
[ Saturday, 25-04-2015, 08:38.44 AM ]
கற்பிட்டி, துறையடி பிரதேச கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 08:15.28 AM ]
நூறு நாள் வேலைத்திட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
[ Saturday, 25-04-2015 09:04:25 GMT ]
நேபாளத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
[ Saturday, 25-04-2015 07:29:07 GMT ]
அல்கொய்தா இயக்கத்தின் இந்திய கிளையின் துணை தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 25-04-2015 06:01:16 GMT ]
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் –சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
[ Saturday, 25-04-2015 07:26:41 GMT ]
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள், அதில் ஒன்றுதான் Polycystic Ovary Syndrome.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 24-04-2015 07:44:43 ]
உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது.